பேக்கரி உற்பத்தி பொருட்களை நடமாடும் சேவையூடாக விற்பனை செய்பவர்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கொரோனா பாதுகாப்பு அங்கிகள் வழங்கிவைப்பு!

Saturday, June 19th, 2021

யாழ் நகரில் இயங்கும் பேக்கரி உற்பத்தி பொருட்களை நடமாடும் சேவையூடாக விற்பனை செய்யும் பிரதிநிதிகளுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள் யாழ்ப்பாணம் பொலிஸாரால்  இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு  இனிவரும் காலங்களில் இந்த பாதுகாப்பு அங்கியினை அணிந்தே விற்பனையில் ஈடுபட வேண்டும் என யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: