பெண்களுடன் தவறான முறையில் அணுகிய யாழ்ப்பாணம் நகர் பகுதி வீதியோர பழக் கடை வியாபாரிகளுக்கு பொலிசார் எச்சரிக்கை!

Sunday, July 2nd, 2023

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வீதியோர பழக் கடை வியாபாரிகள் சிலர் பெண்களுடன் முறைதவறிப் பேசுகின்றனர் என்ற பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கின்றன. இவை தொடருமானால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி நேரிடும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பழம் வாங்கச் சென்ற பெண்ணுடன் முறைதவறி உரையாடினார் என்று தெரிவித்து  பழக்கடை வியாபாரி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டிருந்தார். தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நகர் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபடுவர்கள் நுகர்வோருடன் நாகரீகமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செயற்பட்டால் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வீதியோர வியாபாரத்தில் ஈடுபடும் சிலரது நடவடிக்கையால் அனைவருக்கும் அசௌகரியங்கள் ஏற்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்படும் நிலையில், எதிர்காலத்தில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு அவ்வாறானவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: