புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
Sunday, October 6th, 2019இந்தாண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது. www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
இதேவேளை, மாவட்ட மற்றும் நாடளாவிய ரீதியிலான தரப்படுத்தல் வெளியிடப்பட மாட்டாது என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ள முடியும்.
கொழும்பு மற்றும் ஜயவர்தனபுர கல்வி வலயங்களை சேர்ந்த பாடசாலை அதிபர்கள் நாளை (07) முற்பகல் 9 மணிக்கு பின்னர் பரீட்சைகள் திணைக்களத்தில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும். ஏனைய பாடசாலைகளுக்கு பெறுபேறுகள் தபாலில் அனுப்பிவைக்கப்படும் என, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை உருவாக்க நடவடிக்கை - அமைச்சர் சாகல ரத்நாயக்க!
334 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு - வெளிநாட்டலுவல்கள் அமைச்சு!
வெற்றிகரமான தடுப்பூசித் திட்டத்தால் பாடசாலைகள் செயற்படுகின்றன – இலவசக் கல்வியும் பாதுகாக்கப்பட்டுள்ள...
|
|