புனரமைக்கப்படாதிருக்கும் வீதிகளை புனரமைதத்து தருமாறு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிடம்  கொண்டாவில் கலைவாணி சனசமூக நிலைய பகுதி மக்கள்  கோரிக்கை!

Wednesday, February 1st, 2017

நீண்டகாலமாக புனரமைக்கப்படாதிருக்கும் தமது பகுதி வீதிகளை புனரமைத்து தருமாறு கொண்டாவில் கலைவாணி சனசமூக நிலைய பகுதி மக்கள்  ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்றையதினம் குறித்த சனசமூக நிலையத்தின் மண்டபத்தில் இடம்பெற்ற அப்பகுதி மக்களுடனான  கலந்துரையாடலில் கலந்துகொண்ட கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடமே மேற்குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும் தமது பகுதி மக்கள் எதிர்கொண்டுவரும் வாழ்வாதார பிரச்சினைகள் மற்றும்  தொழில்வாய்ப்பு பிரச்சினைகளுக்கும் தீர்வகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களது பிரச்சினைகளை ஆராய்ந்தறிந்து கொண்ட அம்பலம் இராவீந்திரதாசன் குறித்த கோரிக்கையை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளைப் பெற்றுத்தர முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.மேற்குறித்த கலந்துரையாடலில் நிர்வாக உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கோண்டாவில் வடக்க

Related posts: