புத்தாண்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த நம்பிக்கை!

Tuesday, March 16th, 2021

வரவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அரிசிக்கான பற்றாக்குறை நிலவாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட நெற் தொகைகளை சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட 20 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தள்ள விவசாய அமைச்சர் எதிர்வரும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசி வழங்க இந்த நெல் தொகை பயன்படுத்தப்படும் என்றுமு; சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநெரம் குறித்த நடவடிக்கை காரணமாக, சடுதியாக உயர்த்தப்பட்ட அரிசியின் விலை குறையும் எனவும், அதன்படி அரிசி இருப்புக்களை பாரிய அளவில் மறைத்து வைத்திருக்கும் வர்த்தகர்கள் தங்களிடமுள்ள நெற்தொகைகளை சந்தைக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளதுடன் இதனால் பண்டிகைக் காலங்களில் அரிசி விலையில் அதிகரிப்போ அல்லது அரிசி பற்றாக்குறையோ நிலவாது எனவும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: