புத்தகங்களை வாசிக்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் – கல்வி அமைச்சர்!
Saturday, September 22nd, 2018
அரச பாடசாலை மாணவர்களில் அதிக புத்தகங்களை வாசித்த 100 பேருக்கு வெளிநாட்டு புலமைப் பரிசில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இலங்கை புத்தக கண்காட்சியாளர்களின் சங்கம் 20ஆவது முறையாக கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த செயற்றிட்டம் அடுத்த வருடம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
திங்களன்று சில பாடசாலைகள் மூடப்படும்!
விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 கடற்படையினருக்கு கொரோனா - வடக்கு ...
9 பாடசாலைகளில் திருட்டு - 40 இலட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டி...
|
|