புத்தகங்களை வாசிக்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் – கல்வி அமைச்சர்!

Saturday, September 22nd, 2018

அரச பாடசாலை மாணவர்களில் அதிக புத்தகங்களை வாசித்த 100 பேருக்கு வெளிநாட்டு புலமைப் பரிசில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இலங்கை புத்தக கண்காட்சியாளர்களின் சங்கம் 20ஆவது முறையாக கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த செயற்றிட்டம் அடுத்த வருடம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts:


இலட்சியமும் கொள்கைப்பற்றும்  இல்லாதவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் - தொண்டமானாறு பகுதி மக்கள் ...
மின்சார சபைக்கு ஒரு வாரத்திற்கு எரிபொருள் வழங்குவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதி!
இலங்கை வந்தடைந்த மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜே...