புதிய வடமாகாண ஆளுநர் இன்று கடமைகளை பொறுப்பேற்கிறார்!
Thursday, January 2nd, 2020வடக்கு, மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, பி.எஸ்.எம் சார்ள்ஸ், யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (02) பிற்பகல் ஒரு மணிக்கு தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இதன்மூலம் வடக்கு மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக பி.எஸ்.எம் சார்ள்ஸ் தனது கடமைகளைப் பொறுப்பேற்கிறார்.
இலங்கை நிர்வாக சேவையின் சிறப்புத் தர அதிகாரியான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வட மாகாண ஆளுநராக நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.
சுகாதாரம், சுதேச மருத்துவத் துறை அமைச்சின் செயலாளராகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ள அவர், வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் மாவட்ட செயலாளராக நீண்டகாலம் சேவையாற்றிருந்தார்.
கடந்த ஒன்றரை மாதங்களாக வடக்கு மாகாண ஆளுநர் பதவி வெற்றிடமாக இருந்து வந்த நிலையில், இவர் பதவியைப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|