புதிய நாணயங்கள் வெளியீடு!

இலங்கையில் அண்மையில் புதிதாக 2000, 1500, 500 ரூபா நாணய குற்றிகள் வெளியிடப்பட்டமை தொடர்பில் மத்திய வங்கி உத்தியோகபூர்வ இணைத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் முதன்முறையாக பெரிய தொகையில் வெளியான நாணய குற்றிகள் தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
2550 வருடங்களை பௌத்த மதம் பூர்த்தி செய்வதை நினைவு கூரும் வகையில் இந்த நாணய குற்றிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை “பனி மலை” சின்னத்திலான வெள்ளி உலோகத்தில்தயாரிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியினால் பல்வேறு பாரம்பரிய விடயங்களை நினைவு கூரும் வகையில் நாணயத்தாள் மற்றும் நாணயக் குற்றிகள் வெளியிடுவது வழக்கமான விடயமாகும்.
அதற்கமைய 1957ஆம் ஆண்டு முதல் முறையாக நாணய குற்றி ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Related posts:
பொது போக்குவரத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் கோரிக்கை!
அமைச்சர் கெஹலிய நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பொய்யானது - மருத்துவத்திற்கான மற்றும் சிவில் உரிம...
ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் மே மாதம் நாடாளுமன்றத்தில் சம...
|
|