புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதிசார்ந்த உதவிகள்!

Tuesday, August 14th, 2018

2018 ஆம் ஆண்டு தொடக்கம் இளைஞர்களது புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதிசார்ந்த உதவிகள் வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இதற்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களது புதிய கண்டுபிடிப்புகளானது விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கின்றன. ஆனால் இந்த கண்டுபிடிப்புகளை முன்கொண்டு செல்வதற்கு பல நிதி சார்ந்த தடைகள் நிலவுகின்றன.

இதன் காரணமாகவே நிதியாக 100 மில்லியன் ரூபாய் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த நிதி எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related posts: