புங்குடுதீவு கடலில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்!
Wednesday, June 13th, 2018
புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இருவேறு இடங்களில் ஆண்கள் இருவரின் சடலங்கள் கரை ஒதுங்கி உள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால் அவை மூன்று நாள்களுக்கு மேற்பட்டவையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் மன்னார் கடலில் கடந்த வாரம் மீன்பிடிக்கச் சென்ற இருவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டதுடன் அவர்கள் தொழிலுக்குச் சென்ற படகு புங்குடுதீவில் கரை ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
அமரர் தம்பாப்பிள்ளை யோகநாதனுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அஞ்சலிகள்!
இந்தியாவுக்கான புதிய இலங்கை தூதராக ஆஸ்டின் பெர்னாண்டோ?
எதிர்வரும் 14 ஆம் திகதிவரை பயணத்தடை நீடிப்பு – தொடர்ந்தும் இறுக்கமாக பின்பற்றப்படும் என இராணுவத் தள...
|
|
|


