புகையிரதம் மீது கல்வீச்சு : ஒருவர் பலி!
Monday, August 8th, 2016
புகையிரத பயணத்தின் போது எறியப்பட்ட கல்லால் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார்.
அநுராதபுர போதனா வைத்தியசாலையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் நேற்று(7) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேலையின் நிமிர்த்தம் கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த நபர் மீது வனவாசல – களனி புகையிரத நிலையங்களுக்கு இடையில் கல்வீச்சு தாக்குதல் நடைப்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில், அநுராதபுரம் புளியங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 49 வயது நிரம்பிய உதவி கல்வி இயக்குனரே உயிரிழந்துள்ளார்.
Related posts:
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியைக்கு பரிகாரம் கிடைத்தது.!
சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார வளர்ச்சி - அமைச்சர் மங்கள சமரவீர!
06 ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு நிறைவுசெய்யப்படும் !
|
|
|


