பிள்ளையை பாடசாலையில் விட்டு வீடு திரும்பிய தந்தை சுட்டுக்கொலை !
Wednesday, January 11th, 2023எம்பிலிபிட்டிய – பனாமுர – ஓமல்பே பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் தமது பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீதியில் மறைந்திருந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஓமல்பே பகுதியில் வசித்துவந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
2024 ஆம் ஆண்டுவரை எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானம்!
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு - சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தகவல்!
ராஜபக்சக்கள் கூண்டோடு வீழ்ந்து விட்டார்கள் என்று எவரும் கனவு காணக்கூடாது - பஸில் தெரிவிப்பு!
|
|