பிரித்தானியாவின் பிரதியமைச்சர் இலங்கை வருகை!
Friday, November 4th, 2016
ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான பிரித்தானிய பிரதியமைச்சர் ஜோய்ஸ் ஹெனலே இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளைய தினம் இலங்கை வரவுள்ளார்.
இலங்கை வரும் அவர் இலங்கையின் ஜனநாயகம் , மனித உரிமை பாதுகாப்பு விடயங்கள், நல்லிணக்கம், வறுமையை ஒழிகக் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் 7 ஆம் திகதி வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யும் அவர், ஆளுநர் ரெஜினோல்ட் குரே, முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோரை சந்திக்க உள்ளார்.பிரித்தானியாவின் ஹலோ ட்ராஸ் நிறுவனம் மேற்கொண்டு வரும் கண்ணி வெடி அகற்றும் பணிகளையும் பிரித்தானிய பிரதிநிதி பார்வையிட உள்ளார்.
Related posts:
சுகாதார அமைச்சருக்கு கல்வியின் தரம் பற்றிய பொறுப்பில்லை - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
தற்போது நிலவும் வரட்சியான காலநிலை ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் மாற்றமடையும் - வளிமண்டலவியல் திணைக...
வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துக்களை அள்ளி வீசி அரசியல் செய்பவர்களுக்குச் சிறைச்சாலை வாழ்க்கைதா...
|
|