பிரான்ஸ்சின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்து

Tuesday, May 9th, 2017

பிரான்சின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இமானுவேல் மெக்ரானுக்கு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து, கடந்த மாதம் 23-ம் திகதி அந்த நாட்டில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மெக்ரான், மற்கீம் இடதுசாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய நால்வர் போட்டியிட்டனர். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தலில், மெக்ரான் 65 சதவிகித வாக்குகளுடன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மெரீனை வீழ்த்தினார்.  மெக்ரானுக்கு கடும் போட்டியாக இருந்த மெரீன் தனது தோல்வியை ஏற்று கொண்டார். மெக்ரானை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசிய மெரீன், வலிமையான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

Related posts: