உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடம் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை!
Sunday, November 21st, 2021உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக் காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தேர்தல்களை நடத்தாது பதவிக் காலத்தை ஓராண்டுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் என்பனவற்றுக்கான பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட உள்ளது.
இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தவணை எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெருந்தொற்று நிலைமை மற்றும் பொருளாதார பிரச்சினை என்பனவற்றைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இம்முறை யாழ்.மாவட்டத்தில் 2000 ஹெக்ரெயரில் வெங்காயச் செய்கை!
இறுக்கை பட்டி அணியாததால் வவுனியாவில் ஒருவர் பரிதாபமாக பலி!
அனைத்து பேருந்துகளையும் GPS தொழில்நுட்பத்தின் ஊடாகக் கண்காணிக்க முடிவு!
|
|