பிரதமர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய செய்தி!
Saturday, November 10th, 2018
எதிர்வரும் பொதுத் தேர்தல் மூலம் மக்கள் தங்களது விருப்பங்களை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
நிலையான அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்ப இதன் மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு மக்கள் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்த சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுப்பது தலைவர்களின் பொறுப்பும், கடமையுமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக இதுவரை நிரூபிககப்படவில்லை -அமைச்சர் திலக் மாரப்பன
வலி.கிழக்கில் புகைத்தல் மற்றும் புகையிலைப் பாவனை தடை - ஈ.பி.டி.பியின் பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரனின...
ஜனாதிபதி ரணில் - சவுதி அரேபிய அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம் சந்திப்பு - பொருளாதார உறவுகளை மேலும் வல...
|
|
|


