பிரதமர் இல்லத்திற்கு தீவைக்கப்பட்ட வேளையில் மின் துண்டிக்கப்பட்டது எப்படி? -விசாரணை ஆரம்பம் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, July 10th, 2022

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் தீவைக்கப்பட்ட சம்பவத்தின் போது இல்லம் அமைந்துள்ள 5 ஆவது லேனிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

அந்த நேரத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு எதுவும் இல்லை என்றும், அந்த நேரத்தில் மின்சாரம் எப்படி துண்டிக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் PUCSL தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: