பால் உற்பத்தி குறைவதைத் தடுக்க விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் பி. ஹேரத் தெரிவிப்பு!
Friday, December 31st, 2021உள்ளூர் பால் மாவின் 400 கிராம் பக்கற்றின் விலை சுமார் 20 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது என பண்ணை ஊக்குவிப்பு, பால் மற்றும் முட்டை தொழில் துறைக்கான இராஜாங்க அமைச்சர் பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் தனியார் பால் மா உற்பத்தியாள ருக்குச் சொந்தமான விற்பனை நிலையமொன்றை நேரில் பார்வையிட்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பால் மாவின் தேவை அதிகமாக இருப்பதால், பால் மாவை வாங்க மக்கள் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டில் பால் உற்பத்தி குறைவதைத் தடுக்க விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
பேராதனை பொலிஸ் நிலையம் மீளமைக்க 14 கோடி ஒதுக்கீடு!
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்...
டிசம்பர் மாதம் இறுதிக்குள் நலன்புரி கொடுப்பனவுகளுக்கு பொருத்தமானவர்களைத் தெரிவு செய்ய நடவடிக்கை நிறை...
|
|