பாதுகாப்பு உரிய முறையில் உறுதி செய்யத் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை?

Thursday, April 30th, 2020

கொரோனா வைரஸ் தொற்று பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவர்கள் உள்ளிட்ட முன்னரங்கப் பணியாளர்களின் பாதுகாப்பினை உரிய முறையில் உறுதி செய்யத் தவறினால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்னரங்கப் பணியாளர்களுக்கு போதியளவு பாதூப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை. சரியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது.

அத்துடன் கொரோனா ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் முன்னரங்கப் பணியாளர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தி அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படவில்லை என்பதனை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: