பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு நிறைவேறியது!
Friday, November 18th, 2016அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தின் இறுதிநாளான இன்று (18) குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.
குறித்த வாக்கெடுப்பில், ஜே.வி.பி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 55 உறுப்பினர்கள் தங்களது வாக்கை எதிராக வழங்கியிருந்தனர். இதேவேளை, வாக்கெடுப்பு இடம்பெற்ற வேளையில் 07 பேர் சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்கத்கது. அந்த வகையில் 107 மேலதிக வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆதரவு – 162 (ஐ.தே.க., ஶ்ரீ.ல.சு.க., இ.தொ.கா., ஈ.பி.டி.பி)
எதிர் – 55 (ஜே.வி.பி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி)
சமூகமளிக்காதோர் – 07
Related posts:
கடன் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு!
நைஜீரியாவிலிருந்து தலதா மாளிகை இணையத் தளம் மீதான சைபர் தாக்குதல் !
வெளிமாவட்டங்களுக்கு சென்று சேவையாற்றும் அரச ஊழியர்களுக்கு விசேட போக்குவரத்து சேவை!
|
|