பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளுக்கு அடுத்த மாதம் முதல் விலை அதிகரிப்பை மேற்கொள்ளப் போவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலை அதிகரித்துள்ள நிலையில் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளுக்கு வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மேற்படி வரிவிதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்குமானால் விலை அதிகரிப்பை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பொரளையில் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் கடத்தல்; விசாரணை ஆரம்பம்!
உத்வேகத்துடன் தொடர்ந்தும் உழையுங்கள் - ஊர்காவற்றுறையில் தோழர் ஜீவன்
டெங்கு தொற்று - அபாய வலயமாக மாறியது யாழ். மாவட்டம் – அரச அதிபர் மகேசன் எச்சரிக்கை!
|
|