பாடவிதானங்களில் சிறுவர் பாதுகாப்பை உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை!

நாட்டின் பாடசாலை பாடவிதானங்களில் சிறுவர் பாதுகாப்பு விடயத்தையும் உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அடுத்த வருடம் முதல் தரம் இரண்டிலிருந்து தரம் 8 வரை சிறுவர் பாதுகாப்பு விடயத்தை பாடவிதானத்துடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் கலாநிதி நடாஷா பாலேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான கலந்துரையாடல்களை கல்வி அமைச்சு அதிகாரிகளுடன் நடத்திவருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
நடைபாதைக்கு இடையூறாக வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - பொலிஸ் மா அதிப...
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 2000க்கும் அதிகமான நீர் பாவனையாளர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு - நீர் ...
|
|