பாடப்புத்தகங்களுக்கு பதிலாக ஐ-பேட் இலத்திரனியல் சாதனம் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!
Friday, December 9th, 2016
ஒன்பதாம் வகுப்புக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களுக்கு பதிலாக ஐ-பேட் இலத்திரனியல் சாதனம் வழங்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்மைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இந்த வகுப்புக்களுக்கு உரித்தான பாடங்களை உள்ளளடக்கியதாக ஐ-பேட் இலத்திரனியல் சாதனம் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்மைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பாடல், டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான அமைச்சுக்கான குழுநிலை விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோது விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
Related posts:
விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு தவணைப் பரீட்சைகளில் இனி போனஸ் புள்ளி - கல்வி அமைச்சு அறிவிப்பு!
தனது சாதனையை முறியடித்த இளம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் - ஜனாதிபதி ரணில் பாராட்டு!
சங்க கால வாழ்வியல்' நிகழ்வில் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய அணிக்கு தேசிய மட்டத்தில் முதலாம் இ...
|
|