பாடசாலை மாணவர்களை நோய்களிலிருந்து பாதுகாக்கும் திட்டம்!

Friday, March 9th, 2018

பாடசாலை மாணவர்களை தொற்றா நோய்களிலிருந்து பாதுகாக்கும் கூட்டு வேலைத்திட்டத்தினை கல்வியமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து ஆரம்பித்துள்ளது.

குறித்த திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் கல்வியமைச்சில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் அகிலவிராஜ் காரியவசம், டொக்டர் ராஜித சேனாரட்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலை மாணவர்கள் புகைத்தலுக்கும் மதுபானத்திற்கும் அடிமையாவதை தடுப்பது பற்றி விரிவாக ஆராயப்பட்டது. சுகாதார மற்றும் உடற்கல்வி விடயங்களை உயர்தர வகுப்புக்கான பாடத்திட்டங்களிலும் இணைப்பதுதொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

Related posts: