பாடசாலை மாணவர்களுக்கு நாளைமுதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு நாளைமுதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் 12 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையானது நாளையதினம் ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில் கொழும்பிலுள்ள சீமாட்டி ரிஜ்வே சிறுவர் மருத்துவ மனையில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்..
000
Related posts:
கொள்ளையர்களின் இலக்கு பெண்கள் வயோதிபர்களே!
இலங்கையின் பொருளாதாரம் இவ்வருடம் வீழ்ச்சி காணும் - உலகவங்கி எச்சரிக்கை!
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையில் “லயன் எயார்” விமானசேவை ஆரம்பம் - சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னா...
|
|