பாடசாலை மாணவர்களுக்கான வீதிப் போக்குவரத்து அங்கிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

Wednesday, May 3rd, 2017

யாழ். மாவட்ட வீதிப்போக்குவரத்துப் பொலிஸாரால் வீதிப்போக்குவரத்துக்  கடமையில் ஈடுபடும் பாடசாலை மாணவர்களுக்கான வீதிப் போக்குவரத்து அங்கிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியில் நேற்று  (02) கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கான போக்குவரத்து அங்கிகளை வழங்கி வைத்தார்.

நிகழ்வில் சட்டத்தரணி கதிரவேல் செவ்வேள், கல்லூரியின் அதிபர் , உப அதிபர் , மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts: