பாடசாலை மாணவர்களுக்கான உயர் போஷாக்கை கொண்ட அரிசி – கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர்!

Wednesday, June 26th, 2019

மாணவர்களின் போஷாக்கு நிலைமையை இல்லாது ஒழிப்பதற்கும் அவர்களை வலுவூட்டுவதற்கும் உயர் தரத்திலான போஷாக்குடனான அரிசியை உற்பத்தி செய்து மாணவர்களுக்கு அவற்றை இலவசமாக வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டத்தை உலக உணவு அமைப்பும் விவசாய அமைச்சும் ஒன்றிணைந்து திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் முதற் கட்டத்தின் கீழ் அநுராதபுர மாவட்டத்தில் பின் தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் தரம் 5 இற்கு உட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் இவ்வாறான உணவை வழங்குவதற்கான உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உணவும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தும் நிகழ்வு ஒன்று சிகிரிய சுற்றுலா கேந்திர நிலையத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: