பாடசாலைக்கான 2 ஆம் தவணை இன்றுடன் நிறைவு – 3ஆம் தவணை எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பம்!

Friday, August 16th, 2024

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டின் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்றுடன் (16) நிறைவடைகிறது.

இதற்கமைய அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மூன்றாம் தவணைக்கான பாடசாலையின் முதற்கட்டப் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts: