பாடசாலைகளை மேற்பார்வை செய்வதே பாடசாலை அபிவிருத்திச் சபையின் பிரதான கடமை – 1,000 பாடசாலைகளில் இணையதள வசதியையும் மேம்படுத்த நடவடிக்கை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Saturday, December 17th, 2022

1000 பாடசாலைகளுக்கு இணையத்தள வசதியை வழங்குவதற்கு ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒரு பில்லியன் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அறிவித்துள்ளார்.

கல்வி நிர்வாகத்தை மறுசீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஒன்பது மாகாணங்களில் தற்போதுள்ள 100 கல்வி வலயங்கள் 120 வலயங்களாக விரிவுபடுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்..

புதிய வலயங்களின் வரைபடம் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளது, மேலும் இது ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்கொள்ளும் நிர்வாக சிக்கல்களைத் தீர்ப்பதை எளிதாக்கும்.

மேலும், ஒவ்வொரு பிரதேசத்திலும் தற்போது உள்ள பிரதேச அலுவலகங்களுக்குப் பதிலாக பாடசாலை அபிவிருத்திச் சபைகள் ஸ்தாபிக்கப்படும் எனவும், தற்போதுள்ள 312 பிரதேச அலுவலகங்களுக்குப் பதிலாக 550 பாடசாலை அபிவிருத்திச் சபைகள் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை மேற்பார்வை செய்வதே பாடசாலை அபிவிருத்திச் சபையின் பிரதான கடமை என அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு பாடசாலைகளுக்கிடையில் வளங்களை ஒதுக்கீடு செய்வதன் மூலம் இது நிறைவேற்றப்படுவதாக அமைச்சர் வலியுறுத்தினார். அமைச்சரின் கூற்றுப்படி, தற்போது இயங்கி வரும் 100 வலய அலுவலகங்களில் 86 கணினி வள மையங்கள் உள்ளன, மேலும் 14 நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் 100 கணினி மையங்களும் அடுத்தாண்டு முதல் காலாண்டில் நிறைவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: