பாடசாலைகளை திறப்பது தொடர்பில் பல பிரச்சினைகள் உண்டு: மீள் பரிசீலனை செய்யுமாறும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை!
Friday, June 12th, 2020
கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை நான்கு கட்டங்களின் கீழ் மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்கமைய பாடசாலை நிறைவடையும் நேரம் மற்றும் உயர்தரம், புலமை பரிசில் பரீட்சை ஆகியனவற்றை விரைந்து நடத்துவதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை ஆசிரியர்கள் சேவை சங்கம் கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கல்வி அமைச்சால் எதிர்வரும் ஜுன் மாதம் 29 ஆம் திகதி பாடசாலைகள் மிள ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தள்ளரைம குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ் தயாரிப்பான பல்சிகிச்சை நாற்காலியை கொள்வனவு செய்வதில் சுகாதார அமைச்சு ஆர்வம்!
தேவையற்ற விடயங்களை கூறிக்கொண்டிராது மக்களின் தேவைகளை நிறைவு செய்ய முயற்சிக்க வேண்டும் – ஈ.பி.டி.பியி...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது!
|
|
|


