பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் !
Wednesday, January 2nd, 2019
அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின், 2019அம் ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகிறது.
2018 ஆம் ஆண்டுக்கான 3 ஆம் தவணை கடந்த நொவம்பர் மாதம் 30 ஆம் திகதி நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து அன்றைய தினம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது.
இதேவேளை, புதிய பாடசாலை தவணை ஆரம்பமாவதற்கு முன்னர் பாடசாலை வளாகத்தை சுத்தப்படுத்துமாறு சுகாதார ஊக்குவிப்பு பணியகம் உரிய தரப்புகளிடம் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வைபர் மீதான தடை நீக்கப்பட்டதன் உண்மை வெளியானது!
பெரிய வெங்காயத்திற்கு சில்லறை விலை நிர்ணயம்!
கொரோனோ தொற்றாளருடன் பயணித்தவர்களை இனம் காண நீதிமன்றை நாடியுள்ள யாழ்ப்பாணப் பொலிஸார்!
|
|
|


