பாகிஸ்தானில் சார்க் மாநாடு நடத்துவதற்கான சூழல் இல்லை – அமைச்சர் மங்கள சமரவீர!
Friday, September 30th, 2016
பாகிஸ்தானில் சார்க் மாநாட்டை நடத்துவதற்கான சூழல் இல்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களால் பாகிஸ்தானின் இஸ்லாமபாத்தில் நடைபெறவிருந்த சார்க் மாநாடு கேள்விக்குறியாகியுள்ளது.இந்தியா இம்மாநாட்டை முன்னரே புறக்கணித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, பங்களாதேஷ், பூட்டான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளும் புறக்கணித்தன.
இஸ்லாமபாத்தில் நவம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் சார்க் மாநாடு நடைபெறவிருந்த நிலையில், பெரும்பாலான உறுப்பு நாடுகள் பங்குபற்ற மறுத்ததைத் தொடர்ந்து, இம்முறை சார்க் மாநாடு பாகிஸ்தானில் நடைபெறும் சாத்தியம் குறைவடைந்துள்ளது.

Related posts:
இந்தோனேஷிய ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க முக்கிய பேச்சு!
வைத்திய அலுவலகங்களில் வாகனமின்மையே சேவையின் சிக்கலுக்கு காரணம் -வடமாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் ச...
மேலும் 2,275 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு - சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தகவல்...
|
|
|


