பழைய முறைப்படியே மாகாண சபைத் தேர்தல்கள் – அமைச்சர் பைஸர் முஸ்தபா!

Tuesday, April 11th, 2017

காலாவதியாகவுள்ள வட மத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் நடைமுறையிலுள்ள விருப்பு வாக்கு முறைமையின் அடிப்படையிலிலேயே இடம்பெறும் என உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா அறிவித்துள்ளார்.

இந்த மூன்று மாகாண சபைகளினதும் ஆயுட்காலம் இவ்வருடம் செப்டம்பர் மாதம் நிறைவடைகின்றது. இதனால், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னர் இந்த தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடாத்துவது தொடர்பான சட்ட மூலங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அது முன்வைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை அங்கீகாரத்தின் பின்னர், அது வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படும் எனவும், அதனையடுத்து, தேர்தல் ஆணைக்குழு தேர்தலுக்குத் தேவையான திகதியை அறிவிக்க முடியுமாக இருக்கும் எனவும் அமைச்சர் ஒழுங்குகளை நினைவுபடுத்தியுள்ளார்.

Related posts: