பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினராக பேராசிரியர் வசந்தி அரசரட்ணம்!

Friday, January 10th, 2020



யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்த பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயிரியல் இராசயனத் துறையின் முதுநிலை விரிவுரையாளராக உள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கடந்த பதவிக்காலத்தில் தமிழ் உறுப்பினராக பேராசிரியர் குமாரவடிவேல் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


எல்லை நிர்ணய சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வது குறித்து தேர்தல் ஆணைக்குழு கடும் நிபந்தனை !
புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஊசி மருந்து உற்பத்தி தொழிற்சாலையை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தியோகபூர்...
முன்பள்ளிகளை போட்டி மிகுந்த கல்வி வழங்கும் மற்றொரு பாடசாலையாக மாற்றாமல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை...