பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான கால எல்லை நீடிப்பு!
Monday, June 26th, 20172016-2017 கல்வியாண்டுக்கென பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால எல்லை இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்ககைலழகங்கள் மானிய ஆணைக்ககுழவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்
இந்தக் கால எல்லை நாளையதினம் முடிவடைய இருந்தது. இருந்த போதிலும் மாணவர்களின் நன்மை கருதி இந்தத் திகதி இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த திகதி மேலும் நீடிக்கப்படமாட்டாது. இதுவரை 71 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றும் மானிய ஆணைக்ககுழவின் தலைவர் தெரிவித்துள்ளார்
Related posts:
முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து தூக்கிக் கொண்டு செல்வதை நிறுத்துங்கள் - பொலிஸ் மா அதிபர் அவசர உ...
சிறைச்சாலைகள் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுயாதீன விசாரணை!
பொருளாதார நெருக்கடியால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் சிறுவர்களை பாதுகாக்குமாறு அரச மருத்துவ அதிகார...
|
|