பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல நிதி வைப்பிலிடப்பட்டுள்ளது – உயர் கல்வி அமைச்சர்!

Wednesday, April 1st, 2020

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்குமான மஹபொல புலமைபரிசில் நிதி  மாணவர்களின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலிடப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன்  பல்கலைக்கழகங்களுக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு வாரங்கள் கால அவகாசம் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Related posts: