பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் வெளியாகும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Tuesday, September 28th, 2021

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, விண்ணப்பித்துள்ள மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதற்காக இந்த வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு சுமார் 42 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களுக்கு தொடர்ச்சியான பங்களிப்பு. - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வத...
கிழக்கில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுவதாக ஆளுநரால் அறிவிப்பு!
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுகளில் 45 வழக்குகள் தாக்கல் – யாழ்.மாவட்ட செயலகம் ...