பலாலி அன்ரனிபுரம் முன்பள்ளி மற்றும் விளையாட்டுக் கழகத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் நிதி உதவி வழங்கி வைப்பு!

Sunday, February 19th, 2017

பலாலி அன்ரனிபுரம் விளையாட்டுக் கழகம் மற்றும் முன்பள்ளி ஆகியவற்றின் முதற்கட்ட கட்டுமாணப்பணிகளுக்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கட்சி நிதியிலிருந்து இரண்டு இலட்சம் ரூபா நிதி வழங்கியுள்ளார்

நேற்றுமுன்தினம் குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்த டக்ளஸ் தேவானந்தா  அப்பகுதி மக்களது அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் அவற்றில் சிலவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த பகுதி சிறார்களது கற்றலுக்காக முன்பள்ளி அமைப்பதற்கும் அப்பகுதி இளைஞர்களது விளையாட்டு துறைகளை மேம்படுத்துவதற்காக விளையாட்டுக் கழகத்திற்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்கவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

இதற்கமைய இன்றையதினம் குறித்த முன்பள்ளி மற்றும் விளையாட்டு கழக நிர்வாகத்தினரிடம் தலா ஒரு இலட்சம் நிதிக்கான காசோலையை கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) மற்றும் கட்சியின் வலி.வடக்கு நிர்வாக செயலாளர் ஜெயபாலசிங்கம் (அன்பு) ஆகியோர் வழங்கிவைத்துள்ளனர்.

16810295_1325558847483199_930394270_o

16833646_1325559014149849_91213589_o

Related posts:

ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதற்கு சேதனப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவது காலத்தின் தேவை - பிரதமர் ம...
கடந்த இரண்டு மாத வீதி விபத்துக்களினால் 457 பேர் உயிரிழப்பு - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்த...
அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி - ஒரு பில்லியன் டொலர் கடனை நீடிக்க இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம்!

சாரதிகளுக்கான தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும்- தனியார் பஸ் உர...
யாழ். கிளிநொச்சி மாவட்டங்களில் 33 பாடசாலைகள் 2950 மில்லியன் செலவில் அபிவிருத்தி! கிளிநொச்சி கல்வி வல...
விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கு செயலணியொன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெ...