பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் – மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்!
Friday, May 24th, 2024
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் செயற்படும் மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகவும் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிக்கின்றது.
நாளை (25) அதிகாலை 5.30 மணிக்கு தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக உருவாகலாம்.
அது பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து நாளை இரவு 11.30 மணியளவில் புயலாக மாறும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் மிகவும் பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யும்.
இதேவேளை, கடற்பரப்புகளும் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
000
Related posts:
|
|
|


