அத்தியாவசிய பொருட்களின் விலைக்குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்தில் !
Thursday, October 15th, 2020பருப்பு, சீனி, பெரிய வெங்காயம், ரின் மீன் ஆகியவற்றின் இறக்குமதி வரியை நேற்று முன்தினம்முதல் நீக்கியமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்திற்கு கிடைக்க பெற்றுள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உடனடியாக குறைக்க முடியாது என அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்களின் சங்கத்தின் தலைவர் ஜீ.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கையிருப்பில் உள்ள பொருட்கள் முடிவடையும் வரை பொருட்களின் விலையை குறைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய வாழ்க்கை செலவு மற்றும் கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு பருப்பு, ரின் மீன், பெரிய வெங்காயம், சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரியை நேற்று முன்தினம் நள்ளிரவுமுதல் அரசாங்கம் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தின் கீழ் இரண்டு கோடி 70 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது - கல்வி அமைச்சு!
பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான சிறியளவிலான பல்பொருள் நிலையங்களின் வலையமைப்பை நிறுவ அமைச்சரவை அங்கி...
நெருக்கடி நிலையை தீர்த்து தேர்தலை நடத்த வேண்டும் - முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|