பருத்தித்துறையில் ஈ.பி.டி.பியினால் அரசியல் செயலமர்வு!
Friday, March 24th, 2017பருத்தித்துறை நகர வட்டார நிர்வாகம் மற்றும் பொதுச்சபை உறுப்பினர்களுடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கட்சியின் எதிர்கால அரசியல் செயல்பாடுகள் தொடர்பில் அரசியல் செயலமர்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த செயலமர்வின் போது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியல் செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் கிராம மட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வட்டார ரீதியான கட்டமைப்புகளின் செயற்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது குறித்த பிரமுகர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன் கட்சியினால் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள பணிகள் மற்றும் அரசியல் முன்னகர்வுகள் தொடர்பாகவும் கட்சியின் குறித்த பிரதேச வட்டார நிர்வாக உறுப்பினர்களுக்கு கட்சியின் முக்கியஸ்தர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.
நேற்றையதினம் (23) கட்சியின் பருத்தித்துறை அலுவலகத்தில் குறித்த பிரதேச நிர்வாக செயலாளர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் இரத்னகுமாரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த செயலமர்வு கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன், கட்சியின் வல்வெட்டித்துறை நகர நிர்வாக செயலாளர் இந்திரன் கைலாயினி, மற்றும் பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் மார்க்கு மனுவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|