பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 73.84 சதவீதத்தினர் உயர்தரத்தில் கல்வியைத் தொடர வாய்ப்பு – பரீட்சைகள் திணைக்களம்!

இன்று வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 73.84 சதவீதத்தினர் உயர்தரத்தில் கல்வியைத் தொடர வாய்ப்புப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், 10 ஆயிரத்து 346 மாணவர்கள் 9 பாடங்களிலும் திறமைச் சித்தியான ஏ பெற்றுள்ளனர் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 5 லட்சத்து 56 ஆயிரத்து 256 பேர் தோற்றியிருந்தனர். அவர்களில் 10 ஆயிரத்து 346 மாணவர்கள் 9 பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்றுள்ளனர்.
கணித பாடத்தில் 66.82 சதவீத மாணவர்கள் சித்தியைப் பெற்றுள்ளனர். 73.84 சதவீதத்தினர் உயர்தரத்தில் கல்வியைத் தொடர வாய்ப்புப் பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மட்டக்களப்பில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!
மாகாண வரி மதிப்பீட்டாளர் போட்டி பரீட்சை எதிர்வரும் 7 ஆம் திகதி!
மாற்றங்கள் செய்யப்படுவதற்கு முன்னர் நாடுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்துத் தேவை - ஜனாதிபதி ரணில் விக...
|
|