பரிசூதிய சீட்டுக்களின் விலையை அதிகரிக்க தீர்மானம் – திறைசேரியின் அனுமயும் கிடைத்துள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவிப்பு!

Monday, June 19th, 2023

பரிசூதிய சீட்டுக்களின் விலையை அதிகரிப்பதற்கு திறைசேரியின் அனுமதி கிடைத்துள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் பரிசூதிய சீட்டின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

தற்போது, பரிசூதிய சீட்டு ஒன்றின் விலை 20 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன், அதன் விலை இருமடங்காக அதிகரிக்க, பரிசூதிய சீட்டுக்களில் வழங்கப்படும் பரிசு தொகையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய லொத்தர் சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ஜூலை மாதம் 6 ஆம் திகதிமுதல் உரிய விலையை அதிகரிப்பதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அது தொடர்பில், மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் திகதி தொடர்பில் இந்த வாரத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் கலாநிதி சமிர சி யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: