பரவிப்பாஞ்சான் மக்கள் காணிகளிலிருந்து இராணுவம் வெளியேறுகிறது

Saturday, February 25th, 2017

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் தற்போது வெளியேறிவருகின்ற நிலையில், காணிகளை துப்பரவு செய்யும் நோக்கில் மக்கள் முகாம் அமைந்திருந்த பகுதிகளுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பொது மக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஐந்தாவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையிலேயே இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. அதன்போது, மக்களின் காணிகளை பிரதேசசெயலாளர் அடையாளப்படுத்தியதன் பின்னர் தாம் வெளியேறுவதாக இராணுவத்தினர் உறுதியளித்திருந்தனர்.

அதன்படி, நேற்றையதினம் மக்கள் தமது காணிகளை பிரதேசசெயலாளருக்கு அடையாளம் காட்டியிருந்தநிலையில், இன்று ஐந்தாவது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்ந்துவந்த நிலையிலேயே இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மக்கள், முகாம் அமைந்துள்ள பகுதிகளுக்குள் சென்று காணிகளை சுத்தப்படுத்தவும் இராணுவத்தினர் அனுமதியளித்துள்ளனர்.

239779233paravipanjan

Related posts: