பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் – போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் !

Friday, June 5th, 2020

பொது போக்குவரத்தின் போது சகல பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் முகக்கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக பொது சேவையினை பயன்படுத்த வேண்டாம் எனவும் போக்குவரத்து அமைச்சர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமையில் இருந்து போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளன. இதன்போது சுகாதார ஆலோசனைகள் உரிய வகையில் அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளுக்கு அனுமதி வழங்குவது கட்டாயமாகும்.

சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.

பேருந்து மற்றும் ரயில்வே நிலையங்களில் கை கழுவுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சகல பேருந்துகளிலும் ஆசனங்களில், 50 வீதமான பயணிகளுடன் பேருந்துகள் தனது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதேவேளை, பாடசாலை பேருந்துகள்கள் மற்றும் சுற்றுலா பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகளை தற்காலிகமாக பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்படின் இந்த பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதாக அமைச்சர் மஹந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: