பயங்கரவாத தாக்குதல் – குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் ஜனாதிபதி!
Tuesday, July 23rd, 2019
நாட்டில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் கடந்துள்ள தற்போதைய நிலையில் அரசாங்கத்தின் மீது சாட்டப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் தான் நிராகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுகததாஸ விலையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, கடற்படையினரால் அண்மையில் தெற்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையின் கடத்தலானது, வெலிக்கடை சிறையில் இருந்து வழிநடத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் ஒருவரின் கைபேசியை பரிசோதித்த போது இது குறித்த விபரங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
Related posts:
மக்கள் அதிகமாக நீரை பயன்படுத்துகின்றனர் - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு!
268 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
நாட்டில் மேலும் 41 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தகவல்!
|
|
|


