பதவி விலகும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா – எதிர்வரும் முதலாம் திகதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்பு!
Thursday, May 26th, 2022ஜெனரல் ஷவேந்திர சில்வா, எதிர்வரும் 31 ஆம் திகதி, இராணுவ தளபதி பதவியிலிருந்து விலகவுள்ளார் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி பதவியேற்கவுள்ளார். அவர் இதுவரை காலமும் பதில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக செயற்பட்டு வந்தார்.
இதையடுத்து, எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி தொடக்கம், பாதுகாப்பு படைகளின் புதிய பிரதானியாக அவர் கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.
அதேநேரம், மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, எதிர்வரும் முதலாம் திகதி, புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்பார் என இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிராந்திய நாடுகளிலிருந்து கொரோனா நோயாளிகள் இலங்கைக்குள் நுழையும் ஆபத்து - புலனாய்வு பிரிவு!
இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட காணி, பிராந்திய அரச அதிகாரிகளிடம் கையளிப்பு!
ஐநாவின் 46/1 தீர்மானத்தால் நிறுவப்பட்ட வெளிப்புற முயற்சிகளுக்கான முன்மொழிவை நிராகரித்தது இலங்கை – பத...
|
|