பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

தம்மை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஊடகமொன்றுக்கு பதிலளிக்கையில் ரோஹன லக்ஷ்மன் பியதாசவின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்தார்.
தம்மை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு விடுக்கவில்லை எனவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கைக்கு எத்தகைய உதவிகளையும் செய்வதற்கு தயார் - ரஷ்யா!
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது சொத்து விவரங்களைத் தரவேண்டும் - தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தொண்டு நிறு...
புற்றுநோய்க்கான மூன்றாவது மருந்த இலங்கையிலும் விரைவில் கிடைக்கும் - அமைச்சர் ராஜித சேனராத்ன!
|
|