பண்டாரவளை – பூனாகலை மண்சரிவு – 200 பேர் பாதிப்பு – சிக்குண்டவர்கள் பாதுகாப்பாக மீட்பு!
Monday, March 20th, 2023பண்டாரவளை – பூனாகலை – கபரகலை பகுதியில் நெடுங்குடியிருப்பொன்றின் மீது நேற்றிரவு மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அனர்த்தத்தில் காயமடைந்த 7 பேர் கொஸ்லாந்தை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டு நெடுங்குடியிருப்புகளில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், குறித்த மண்சரிவில் சிக்குண்டவர்களை பிரதேச மக்களும், அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் இணைந்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
குறித்த அனர்த்தத்தில் எவருக்கு உயிர் ஆபத்து ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள 64 குடும்பங்களை சேர்ந்த 200க்கும் அதிகமானோர் பூனாகலை இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று!
நடைமுறைக்கு வந்தது இலஞ்சீற் பாவனைத் தடை - மேலும் 8 உற்பத்தி பொருட்களின் பாவனையை உடனடியாக தடை செய்யவ...
சிவப்பு வலயத்திலிருந்து இலங்கை மீள மேலும் ஒரு வாரகாலமாவது தேவை - எச்சரிக்கிறார் விசேட வைத்திய நிபுணர...
|
|
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்கங்கள...
நாடு முன்னோக்கி நகர்வதற்கு அரசியல் ஐக்கியம் அவசியம் – ஐக்கியத்துக்காக அமைச்சு பதவியையும் துறக்க தயார...
வீதி விபத்துக்களை மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை - எச்சரிக்கையுடன் செயற்படுமா...